கடல் அலையின்
இரு நீர்த்துளிகள் கரையில்,
காதலர்கள்!
இரு நீர்த்துளிகள் கரையில்,
காதலர்கள்!
ஒரு கடல் தேசத்தின்
காதல் குருவிகளுக்கு
இறை தந்த
இரை , காதல் .
இரு துளிகள் ஒரு கடலாய்,
ஒரு கடலே மனம் கவர் காதலாய்.
வானில் நட்சத்திரதிரங்களுக்கு ஒரு நிலா
எங்கள் காதல் நட்சத்திரங்களுக்கு
எது நிலா?
வீதி நட்சத்திரங்கள் மின்னும்
காதல் தான் எங்கள் நிலா.
பூக்களைக் கொடுத்து காதல்
மொழிவதில் நானும் என்னவளும்
உடன்படுவதில்லை.
எங்கள் காதலுக்காய்
இன்னோர் உயிர்க்கொலை எதற்கு!
மௌன மொழி எங்களின் காதல்
சொல்லும் கடவுளின் தீர்க்கம் .