கடலாய் விரிந்து!
காதல் பேசிக்கொண்டு ,
தினம் தினம் பூக்கள் தேடும்
பட்டாம் பூச்சிக்கு மட்டும் வாழ்க்கை!
தன்னைத் தரத் தயாராய் இருக்கும்
பூக்களுக்கு மத்தியில்
அவன் அந்தப்புரத்து மன்மதன்.
அறிவிக்கப்படாத மன்னவன்!
ஒரு பட்டாம் பூச்சி விட்டுப்போனதாய்
வீழ்ந்து கிடக்கும் பூக்களின் மத்தியில்
அதன் தேடல்கள் மட்டும் இனிதாய்...