Saturday, January 29, 2011

ஓர் பட்டாம்பூச்சியின் தேடலும்,பூக்களின் காதலும்

கடலாய் விரிந்து!
காதல் பேசிக்கொண்டு ,
தினம் தினம் பூக்கள் தேடும்
பட்டாம் பூச்சிக்கு மட்டும் வாழ்க்கை!
தன்னைத் தரத் தயாராய் இருக்கும்
பூக்களுக்கு மத்தியில்
அவன் அந்தப்புரத்து மன்மதன்.
அறிவிக்கப்படாத மன்னவன்!
ஒரு பட்டாம் பூச்சி விட்டுப்போனதாய்
வீழ்ந்து கிடக்கும் பூக்களின் மத்தியில்
அதன் தேடல்கள் மட்டும் இனிதாய்...

கட்டிவைத்த காதல்...

என் காதல் அணுவின்
கடைநிலைக் கவிதை
உனக்குள் உயிர்ப் பூ
பூக்கச் செய்த தருணம்!
எனக்குள் தவம் நீட்டிக் கொள்ளச்
சொன்னது மனம்.
நான் காதலின் பரிசாய்
உனக்குத் தந்த முத்தங்களுக்கு
பதிலாய் நீ எனக்குத் தந்த
"பிள்ளை நிலா "என் சந்தோசத்தின்
முடிவில்லா முடிவிலி.
கடமைச் சூழலின் பிரிவு நிலையில்
நினைவுகளால் என்னையும்
நிழல்களாய் நம் பிள்ளையையும் கட்டிவைத்துக்
காதல் பேசும் உன் அன்புக்கு
நான் என்ன தவம் செய்தேன்!