உனக்காக ஒரு கவிதை,..
நீ எழுதும் முன் நான்
தந்த காதல்
நட்சத்திரங்களை
கொட்டி காதல் பரிசாய் தரவேண்டாம்,
எனக்காக நேரங்கள் செலவிடு போதும்,..
போதும் என்று மனம் சொல்லும் போது
வேண்டும் என்று சொல்கிறது,காதல்....
நான்
உன்னைத்தான் யோசித்தேன்,
எழுத்தாய்
வந்தவை எல்லாம்
கவிதைகளாம்...
நான்,
உனக்கான பக்கங்களாய்
வேண்டுமா,
உன் பக்கத்தில் வேண்டுமா?
நான் காத்திருந்த நிமிடங்கள்
எல்லாம் பூத்திருந்தன உன் நினைவுகள்.....
தெரியாத நபர்தான்,..
சில மணி பேசினோம்..
நீ மறந்தும்,...நான் நினைத்தும்....
உன்னிடம் கோபம் கொண்டு யாரிடம் நட்பு தேடுவேன்
நீ பேச வேண்டும் என்று நினைக்கிறேன்,
யார் யாரோவெல்லாம் வந்து பேசுகிறார்கள்..
காதலிப்பதாய் சொல்ல வில்லை...
காத்திருப்பதாய் தான் சொல்லி இருக்கிறேன்....
உன் கண்கள் பேசுகின்றன.
வாய் தான் மௌனம் சாதிகின்றது....