Monday, March 28, 2011

விடியலில் அவள் ...










நீ தொட்டுப் போடும்

கோலம் பார்க்கவே

விடிகிறது என் வானம்!

இரவுகளில் நிலவாய் இருந்து

ஆளுமை செய்தவளே ,

காலையில் கம்பிவலைக்குள் என்னைக்

கட்டிப் போடுவது என்ன நியாயம் ?

உன் புன்னகைகளை , வாசல் கோலங்களில்

எனக்கான விடியலின் பரிசாய்த் தரும்

சூட்சமம் எங்கேயடி கற்றுக்கொண்டாய் ?

தழும்புகள்...


சுடும் இரவுகளுக்கு

மஞ்சள் புன்னகையில்

சுகம் தரும் இதமானவள் நிலா !

அவள் நிராகரித்த தருணங்களில்,

ஆகாயமாய் நான் எனக்குள்

ஏற்படுத்திக் கொண்ட தழும்புகள் எல்லாம் உண்மையை உரக்கச் சொல்லும்

வெள்ளி நட்சத்திரங்கள்.......

Sunday, March 27, 2011

கண்ணீர் சுனை...

விரும்பிய அழகியல்

நிறைத்துக் கிடந்த வானம் ,

தழுவலின் அர்த்தம் சொல்லி

சிலிர்க்கச் செய்யும் நிலா,

என் காதலின்பால் நான்

காத்துக் கிடந்த தருணம்.சுகமான சுகம்!

காதலின் நிகர் காதல் எனச் சொல்லி

நான் இமைமூடாது கழித்த இரவுகளை

இதயம் குத்திக் கிழித்தவள் ,ஏனோ

என் கண்ணீர்ச் சுனையில்

கால் நனைக்க ஆசைப்படுகிறாள்...

அன்று காதலின் சுகம் மட்டுமே அறிந்தவள்,

என் கண்ணீரின் சூடு அறிவாளா என்ன?