Thursday, September 30, 2010

புன்னகை தேசம் ...


புன்னகை,
ஒரு பூவிதழ் சிந்தும்
மந்திரப் பொன்னகை.
நூலிழை கோர்த்து நெய்த
பட்டுப் போல , பால்
மழை பொழியும் வானம் போல
என்றும் புதிதாய்
எப்போதும் உண்மையாய் நீ சிரிக்கும்
அந்த அன்புச் சிரிப்பிற்கு ,
நான் ரெக்கைகள் இல்லாத விசிறி.
மரகதப் புன்னகை வீசி
எந்திரமான உலகத்தை
சந்திரவதனம் செய்யும் சரித்திரம் உன் புன்னகை.
கவலை தோய்ந்த எனக்கு கருவாய்
வாய்த்த கவிதை உன் புன்னகை.
ஏழையாகப் பிறந்த உந்தன்
புன்னகை தான் எங்கள் தேசத்தின் அடையாளம்

Wednesday, September 22, 2010

நம் புரிதலில்....




















முடிந்ததாய்ச் சொல்லி

தூரம் போகச் சொல்லும்

உன் மென்மைகளும் ,

ஏமாற்றமாய் இருந்தாலும்

விலகி நின்று வாழ்த்தச் சொல்லும்

என் மௌனங்களும், காதலின் புரிதல் சொல்லும்

கடலோரத்து கவிதைகள் ...

இதமான நம் உணர்வுகளின்

மிதமான காதல் ,பூத்து விழுந்து

பூமியில் புதைந்து கிடக்கிறது....

நாளையும் பூக்கள் பூக்கும் ! அவை

விடுதலை கேட்டு அழும் என் காதலுக்கு

காதலின் புரிதல் பேசும் ,பூக்களாய் சிரித்து நிற்கும்.....