நீ தொட்டுப் போடும்
கோலம் பார்க்கவே
விடிகிறது என் வானம்!
இரவுகளில் நிலவாய் இருந்து
ஆளுமை செய்தவளே ,
காலையில் கம்பிவலைக்குள் என்னைக்
கட்டிப் போடுவது என்ன நியாயம் ?
உன் புன்னகைகளை , வாசல் கோலங்களில்
எனக்கான விடியலின் பரிசாய்த் தரும்
சூட்சமம் எங்கேயடி கற்றுக்கொண்டாய் ?