Saturday, January 29, 2011

கட்டிவைத்த காதல்...

என் காதல் அணுவின்
கடைநிலைக் கவிதை
உனக்குள் உயிர்ப் பூ
பூக்கச் செய்த தருணம்!
எனக்குள் தவம் நீட்டிக் கொள்ளச்
சொன்னது மனம்.
நான் காதலின் பரிசாய்
உனக்குத் தந்த முத்தங்களுக்கு
பதிலாய் நீ எனக்குத் தந்த
"பிள்ளை நிலா "என் சந்தோசத்தின்
முடிவில்லா முடிவிலி.
கடமைச் சூழலின் பிரிவு நிலையில்
நினைவுகளால் என்னையும்
நிழல்களாய் நம் பிள்ளையையும் கட்டிவைத்துக்
காதல் பேசும் உன் அன்புக்கு
நான் என்ன தவம் செய்தேன்!


No comments:

Post a Comment