Thursday, September 30, 2010

புன்னகை தேசம் ...


புன்னகை,
ஒரு பூவிதழ் சிந்தும்
மந்திரப் பொன்னகை.
நூலிழை கோர்த்து நெய்த
பட்டுப் போல , பால்
மழை பொழியும் வானம் போல
என்றும் புதிதாய்
எப்போதும் உண்மையாய் நீ சிரிக்கும்
அந்த அன்புச் சிரிப்பிற்கு ,
நான் ரெக்கைகள் இல்லாத விசிறி.
மரகதப் புன்னகை வீசி
எந்திரமான உலகத்தை
சந்திரவதனம் செய்யும் சரித்திரம் உன் புன்னகை.
கவலை தோய்ந்த எனக்கு கருவாய்
வாய்த்த கவிதை உன் புன்னகை.
ஏழையாகப் பிறந்த உந்தன்
புன்னகை தான் எங்கள் தேசத்தின் அடையாளம்

No comments:

Post a Comment