Wednesday, September 22, 2010

நம் புரிதலில்....




















முடிந்ததாய்ச் சொல்லி

தூரம் போகச் சொல்லும்

உன் மென்மைகளும் ,

ஏமாற்றமாய் இருந்தாலும்

விலகி நின்று வாழ்த்தச் சொல்லும்

என் மௌனங்களும், காதலின் புரிதல் சொல்லும்

கடலோரத்து கவிதைகள் ...

இதமான நம் உணர்வுகளின்

மிதமான காதல் ,பூத்து விழுந்து

பூமியில் புதைந்து கிடக்கிறது....

நாளையும் பூக்கள் பூக்கும் ! அவை

விடுதலை கேட்டு அழும் என் காதலுக்கு

காதலின் புரிதல் பேசும் ,பூக்களாய் சிரித்து நிற்கும்.....




No comments:

Post a Comment