நிறைத்துக் கிடந்த வானம் ,
தழுவலின் அர்த்தம் சொல்லி
சிலிர்க்கச் செய்யும் நிலா,
என் காதலின்பால் நான்
காத்துக் கிடந்த தருணம்.சுகமான சுகம்!
காதலின் நிகர் காதல் எனச் சொல்லி
நான் இமைமூடாது கழித்த இரவுகளை
இதயம் குத்திக் கிழித்தவள் ,ஏனோ
என் கண்ணீர்ச் சுனையில்
கால் நனைக்க ஆசைப்படுகிறாள்...
அன்று காதலின் சுகம் மட்டுமே அறிந்தவள்,
என் கண்ணீரின் சூடு அறிவாளா என்ன?
No comments:
Post a Comment