Sunday, August 15, 2010

எங்கள் சுதந்திரத்தில் இனி என்றும் ....

எங்கள் சுதந்திரத்தில் இனி...
ஆயிரம் பூக்கள் பூக்கட்டும்
அடிமை விலங்குகள் உடையட்டும் !
பாசக்கரத்தை நாம் நீட்டி
நேசம் மட்டும் நாம் பேசுவோம்!
பாரே போற்றும் பாரதம் ! ஒற்றுமை
பக்குவம் சொல்லும் ஓர் ரதம்!
எனப்பெயர் பெறட்டும்!
எங்கள் சுதந்திரத்தில் இனி என்றும் ....
சிநேகம் என்றும் சிலிர்க்கட்டும்.
சின்னக்குழந்தைகள் சிரிக்கட்டும்
செல்லப் புன்னகை பூக்கட்டும்
சிறகுகள் நம்மில் விறியட்டும்
எங்கள் சுதந்திரத்தில் இனி ....
வானம் முட்டும் சந்தோஷம்
என் ஏழைக்கூலிக்கும் கிடைக்கட்டும்
ஏற்றம் பிடிப்பவன் கைகளுக்கு
நலமாய் எல்லாம் கிடைக்கட்டும்!
எங்கள் சுதந்திரத்தில் இனி ....
தரிசாய் கிடக்கும் நிலமெல்லாம்
பரிசாய் மரங்களை நிரப்புவோம்!
ஆணும் பெண்ணும் சமமென்னும்
அற்புதம் புரிந்து வாழ்வோம்!
எங்கள் சுதந்திரத்தில் இனி....
களவுகள் மனம் திருடுவதாக மட்டும் இருக்கட்டும்!
திருடர்களும் திருந்தட்டும்
கொள்ளைக் காசுகள் வேண்டும் மனம் இல்லாது,
கொடுத்து உதவும் மனங்கள் பிறக்கட்டும்
எங்கள் சுதந்திரத்தில் இனி...
வெள்ளைக்காரன் எங்கள்
வீட்டுக் கூலிக்கு வரட்டும்!
அப்போதும் எங்கள் மனம் விருந்தோம்பல்
மட்டும் பேசட்டும்!
தியாகம் செய்த தியாகிகள்
என் தேசம் வளர்த்த தலைவர்கள்
யாரும் மறவாத சத்தியத்தை நாம் என்றும்
மறவாத மனமிருக்கட்டும்.
எம் இந்தியதேசம் வண்ணமாய்
உலகிற்கு ஒளிக்கட்டும்.
எங்கள் வாழ்த்துக்கள்
வானம் கடந்து நட்சத்திரங்களாய்
பூக்கட்டும் !

No comments:

Post a Comment