Sunday, August 1, 2010

காதலும்,நட்பும்....



நட்பு,
எல்லோரிடமும்
என்னை நேசிக்கச்
சொன்ன இதயம் !



காதல்,
எல்லோரையும் விட்டுவிட்டு
என்னை மட்டும் நேசி
எனச் சொல்லும் இதயம்!

நட்பு,
தோழனை முன்னிறுத்தி
பின்னிருக்க ஆசைப்படும் இதயம் !

காதல் ,
காதலை முன்னிறுத்தி
காதலனை பின்னிறுத்தி
அவன் கைபிடிக்குள்
நிற்க ஆசைப்படும் இதயம்!

நட்பு ,
எவ்வளவு உப்புப்
போட்டு சாப்பிட்டாலும்
வீராப்பு மட்டும் வராது.
திட்டிக்கொண்டாலும்,சண்டை போட்டாலும்,
அந்த நிமிடமே
திரும்பப் பேசிக்கொண்டிருக்கும் இதயம்!

காதல்,
ஒரு முறை பேசவில்லை
என்பதற்காக ஓயாது அழைத்து
பின் ஒரு நாள் முழுதும் பேசாமலிருந்து
அழுது ஆர்ப்பாட்டம் செய்து
அடுத்த நாள் அமைதியாக
மன்னிப்பு கேட்கும் இதயம்!

நட்பு,
அன்பில் முடிவில்லாத முடிவிலி.
விட்டு விட முடியாத பாசம் !
அது தான் நட்பு.

காதல்,
அன்பின் சண்டைகள்
முடிவில்லாத முடிவிலி .
விட்டு விலகமுடியாத நேசம்!
அது தான் காதல்.

நட்பு,
சுதந்திரமாய்
பறக்கும் பட்டம்!

காதல்,
சுதந்திரமாய்
பறக்கிறேன் எனச் சொல்லி
கட்டிப் போடப் பட்டிருக்கும்
கொடி!

நட்பு,
எல்லோரும் சமம்
எனச் சொல்லும் இதயம்!

காதல்,
நீயும் நானும் மட்டும் சமம்
எனச் சொல்லும் இதயம்!

காதலுக்கு உதவி தேவை என
நண்பனிடம் வந்த போது
நட்பில் நம்பிக்கை வைத்து
காதல் வெற்றி பெற்றது.
யாருமில்லாமல் நின்றவர்களை
சேர்த்துவைத்த போது
நட்பு வெற்றி பெற்றது!


என்னைப் பொறுத்தவரையில்
காதலுக்கும் , நட்பிற்கும்
ஒரு நூலிழை வித்தியாசம் தான் .
ஆனாலும்,
நட்பு சற்று உயரத்தில்!

கேட்டுப் பாருங்கள் காதலர்களை
தங்களை
சேர்த்து வைத்த நண்பன் பற்றி .....





No comments:

Post a Comment