Monday, October 4, 2010

இன்று புதிதாய்ப் பிறந்தேன் .


என் தாய் அவள் மகிழ ,
என் தந்தை அன்பால்
எனைக் கட்டி முத்தமிட,
என் அண்ணன் அழகாய் ரசித்திட,
என் நண்பன் என்னில்
நேரங்கள் தொலைத்து நட்பு பேச ,
பரிசாய் நான் இன்று பிறந்தேன்...
நான் வணங்கும் கோவில் என் குடும்பம் ,
நான் சம்பாதித்த கோடிகள் என் நண்பர்கள்
எத்தனை முறை முட்டை வாங்கினாலும்
என்னை முதல்வனாக்கிட ஆசிகள் தரும் ஆசான்
இத்தனையும் இனிதாய் தந்த என் இறைவா
உன் அத்தனைக்கும் நன்றி சொல்ல
இன்று புதிதாய்ப் பிறந்தேன்.
என் தாய்க்கு நான்
நான் சிறகுகள் இல்லாத தேவதை.
என் தந்தைக்கு, நான்
புது உறவு சொல்லும் வாரிசுப் பொக்கிஷம்
என் சகோதரனுக்கு,நான்
தொட்டுப் பேசச் சொல்லும் குட்டி பொம்மை
அன்பன் நண்பனுக்கு,
உன்னைப் போல் ஒருவன்
நானும் நீயும் என்றுமே நண்பனாய்....
என் காதலிக்கு , நான் முற்றுப் பெறாத முடிவிலியாய்
என் ஆசானிடம் , முட்டை வாங்கி
ஆதியும் அந்தமும் சொல்லும் "முதல்வனாய்" ...
இப்படி எல்லோருக்கும் எல்லாமுமாக நானிருக்க
இன்று புதியதாய் பிறந்தேன்...

No comments:

Post a Comment