என் பேரன் என்னைத் தொட்டுப்
பேசும் போதெல்லாம் நான்
செத்துப் பிழைக்கிறேன்.
என் மகன் என்னை திட்டிப்
பேசும் போதெல்லாம்
செத்துப் போகிறேன்.
வாழ வந்தவளை வைத்துக்கொண்டு
வாழ வைத்தவளை வீதியில் வைத்த தருமன்
என் மகன்....
உள்ளத்தில் இடம் தந்தவளுக்கு
இல்லத்தில் இடம் இல்லையாம்.
இன்னொருநாள்
என்மகனும் வருவான் ,....
அவன் வருவது
என்னைப் பார்ப்பதற்காக
மட்டும் இருக்கட்டும்,
என் பேரனும் அந்தத் தவறைச்
செய்யாதிருக்கட்டும் ....
என் வலி எனக்குப் பலம்
என் பிள்ளைக்கு வலித்தால் எனக்கும் வலிக்கும்,
நான் தாய் அல்லவா .....
இப்படிக்கு
காத்திருக்கும் தாய் மனம் .
Nice one da...
ReplyDeleteTrue lines.......
ReplyDeletewonderful anna,, touching lines..
ReplyDelete