Tuesday, July 27, 2010

விழுதுகள்....

இன்று முதல்
எனக்குச் சுதந்திரம்!
என் புத்தகப் பையை
உன் தோல்களில் மாட்டிவிட்டு
சொப்பனம் காணும் சுதந்திரம்.....
உன் விழுதுகள் எனக்குத்
தோழமை தரும்
கரங்கள் என்பது
யாருக்குத் தெரியும்?
என் சிநேகிதனும் நானும்
சிநேகித்த நிமிடங்கள்
உன் நிழல்களில்தான் ....
படிக்கச் சொல்லி பள்ளிக்கு
அனுப்பும் அப்பா,
படிக்கவில்லை எனச் சொல்லி
வீட்டிற்கு அனுப்பும் ஆசான் ,
இவர்களுக்கு மத்தியில்
நீ மட்டும் எனக்கு பிடித்தமான
மரக்குரங்கு விளையாட்டு விளையாட
அங்கும் இங்குமாய்
கரங்கள் நீட்டிக்கொண்டு ...
என் வீடும் ,பள்ளியும் ஏனோ தூரமாய்
நீ மட்டும் எனக்கு நேசமாய் !
உன் வெறும் பொழுதுகளின் அழையா
விருந்தாளி நான்,
என் விடைபெறமுடியாத
தோழமைக்குச் சொந்தக்காரி நீ
கிளைகள் பிரிந்து இருந்தாலும்
உறவுக்குத் தோழமை
நீட்டும் உன் கரங்கள்
நேசத்தின் விருட்சமாய்.....

No comments:

Post a Comment