Thursday, July 29, 2010

கார்காலம்.....


கார்காலம்
காதல் தேசத்திற்கு
கடவுளின் கொடை !
மழைக்காலம்!
சின்னஞ்சிறுசுகளுக்கு
விழாக்காலம்!
என் பருவத்துச் சிட்டுகளுக்கு
இது மட்டுமே காலம்!

மழை வரும், மண் வாசம் வரும்.
மனம் ஏதேதோ பேச வரும்.
கப்பல் விடச் சொல்லும்,
காதலிக்கச் சொல்லும்,
குடைக்குள் நடக்க ஆசைப்படும்
கொட்டும் மழை பார்த்ததும்
குற்றாலத்தில் குளிக்கும் ஆசை வரும்!
குடை விட்டெறிந்து கொண்டாட்டம்
போடச் சொல்லும்.

கங்கையோ,காசியோ...
கடைக்கோடி காவிரியோ !
தேடிச் செல்ல விதி இல்லை.
நீ எங்கள் தேகம் நனைத்து
பருவத்தின் பாவம் கழுவினாய்!

அக்கரை வானத்தின்
சர்க்கரை நீர்பட்டு
இக்கரை தேசம் பூத்துக் கிடக்குது
புது உலகம் காணுது!

உன்னில் நனைந்து நனைந்து
காதலின் சுவாரசியம்
பேசிக்கொள்ள இனி
எனக்கும் அவளுக்குமாய்
மழைக்காலம் தினம் தினம் வருக.....

No comments:

Post a Comment