Wednesday, July 28, 2010

களவாணி...


என்னிடம் பேசாதே
எனச் சொல்லிவிட்டு
என்னை காதலித்துக் கொண்டிருக்கும்
களவாணி நீ !
ஆயிரம் தேவதைகள் இருந்தாலும்
இந்த அன்புக் கிறுக்கனை
என்னை மட்டும் பார் என
ஆசை சொல்லும் களவாணி நீ
முகவரி தெரியாமல் நிற்கும் பெண்ணிடம்
சாதாரணமாய் நான் பேசிக்கொண்டிருக்கையில்
உன் முகத்தில் தெரியும் கோபத்தை மூக்கில் வைத்து முறைத்துப் பார்க்கும் களவாணி நீ!
ஆயிரம் முறை கேட்டாலும்
எனக்கு ஏதும் வாங்கி
வரவேண்டாம் எனச் சொல்லிவிட்டு
வீட்டிற்குள் நான் வந்ததும்
என்ன வாங்கிவந்தேன்
என எட்டிப்பார்க்கும் அசட்டுக் களவாணி நீ!
நான் முத்தம் தர வருகையில்
கண்களை மூடிக்கொள்வாய்
காதல் பேசச் சொல்வாய். நீ
கண்கள் மூடிக் கொண்டதாய்
நான் திரும்பிப் போகும் போது
என் சட்டையை பிடித்து
முத்தம் கேட்கும் முரட்டுக் களவாணி நீ!
திருவிழாவில்
மாடு பிடிக்கச் செல்லும்
என்னிடம்
என்னை வீழ்த்திவிட்டு
எந்த மாட்டை வேண்டுமானாலும்
பிடித்துக்கொள் என
கறுப்புக் கலர் கண்ணாடி போட்டு
சவ்வரிசி ஐஸ் தின்று என்னிடம் சிரிப்புச் சித்திரவதை
செய்யும் குறும்புக்கார களவாணி நீ!
என்னைத்தான் காதலிப்பேன்
என்னைத்தான் கட்டிக்கொள்வேன்
என உன் ஆயி அப்பனிடம் முரண்டு
செய்யும் போது
என் சின்ன இதயம்
சிரிச்சுப் பூக்குதடி என் செல்லக் களவாணி!
கையில் மருதாணி சிவக்கவில்லை
வாயில் போட்ட வெத்தலை சிவக்கவில்லை என்றதும்
கண்கள் சிவந்து போய்
நீ என்னைக் காதலிக்கிறாயா ?
இல்லையா ? என
கண்ணீரில் கரையும் நீ
என் இதயம் திருடிய
காதல் களவாணி...

2 comments: