Sunday, July 25, 2010

எழுத்துப் பிழைகள் ....






அவர்களுக்காய்....




எனக்குள் உள்ள
உயிர் எனபது நீ தந்தது
அழகான வாழ்க்கை பிழையானால்
நான் என்செய்வது?
இது என் பிழையா
இறைவா
உன் எழுத்துப் பிழையா?
சிலர் பாவம் என்பார்
சிலர் போ ... போ.. என்பார்

உடல் கூறிலே ஒரு மாற்றமே
உரு மாற்றமே தவிர
ஒரு மாற்றமும் இல்லை....
ஆசைகள் நிரப்பி
அழகாய் வாழ எனக்கும் ஆசைதான்
அர்த்தம் இல்லாத
வார்த்தைகளின் அட்சதைகளில் மட்டுமே வாழ்ந்து
அன்புக்கு ஏங்கும்
நாமும் மனித பிறப்பு தான் ....
அவன் என்று சொல்வார்,ஐயோ!
அவள் என்றும் சொல்வார்...
இறைவா !
நான் யார் என்று நீ சொல்.....
இது ஞானப் பிறப்போ
இல்லை ஈனப் பிறப்போ
இதுவும் ஒரு பிறப்பென்று
உலகிற்கு உணர்த்து
இல்லை எனில் வாழ்க்கை விட்டு
என் உயிர் வீழ்த்து
இறைவா நீ அறிவாய்
உன் எழுத்து பிழைகளும்
உயிர் என்பதை.....


No comments:

Post a Comment