Monday, July 26, 2010

பிரார்த்தனை ....

எங்கள் பிரார்த்தனைகளை
ஏற்றுக்கொள்ளாமல்
எங்கே மறைத்து வைத்திருக்கிறாய்
அந்த அழகான விடியலை?


அன்பான மகன்,
அப்பாவை கேட்டுக் கொண்டிருக்கும்
பேரன், அழுபவர்களுக்கு
ஆறுதல் சொல்ல முடியாமல்
அன்பு சொல்லும் அம்மா,



என் பிள்ளையை கொன்றுவிட்டு
என்னை மட்டும் ஏன் வைத்திருக்கிறாய்
என பிரார்த்தனைகளில்
தன்னை வருத்தி கொண்டிருக்கும் மூதாட்டி...

சிநேகம் சொல்லும்
சிட்டு குருவிகளின்
சங்கீதம் தொலைத்து ,
பசுமை நிறைந்த
எங்கள் தாயகத்தை
போர் நிறைத்து புகையாக்கிய
உங்கள் கரங்களில் ரோஜா பூ
எங்கள் கரங்களில் இன்னும்
அடிமை விலங்குகள் !
போர் முடிந்ததாய்
புத்தகங்களை மூடி வைத்து விடாதீர்கள் .
அன்பு மகனை இழந்த தாய்,
கணவனை இழந்த மனைவி,
கால் இழந்த குழந்தை
கற்பிழந்த காதலி,
காதலை இழந்த காதலன் என
இனி தான் எங்கள் கதை ஆரம்பம்....

நின்று போன யுத்தத்தில் ,
மிச்சம் இருக்கும்
எங்கள் தேசத்து
இளங்கலை பயிர்கள் உணவுக்கின்றி
உறவுக்கின்றி
ஒரு ............................
வார்த்தைகளால் நிரப்ப முடியவில்லை
அம்மா வலிக்கிறது ............
எங்கள் தேசத்தில், எங்கே அந்த அழகான விடியல்?....

No comments:

Post a Comment