Saturday, July 24, 2010

எங்கள் ஊர்...


தூரத்தில் தெரியும்
ஒற்றைப் பனை மரம்
ஆற்று வெள்ளத்தில்
அடித்துச் செல்லப் பட்ட குதிரைகள் ,
அன்னார்ந்து பார்க்கச் சொல்லும்
அய்யனார் சிலை ,
சுமைதாங்க மனம் இன்றி
மர நிழல் தாங்கி நிற்கும் சுமைதாங்கிக் கல் ,
பச்சைப் பசேல் என்று கிடக்கும் வயல் வெளியில்
காக்கை எச்சம் போட்டது தெரியாமல்
காவல் நிற்கும் பொம்மை காவல் காரன்
அடர்ந்த மரங்கள் ,அதில் அழகாய்
வீடு கட்டி ரசிக்கும் தூக்கணாங்குருவிகள் ,
தெருவோரச் சிறுவர்களின் சிரிப்பும் ,விளையாட்டும்
திண்ணை வைத்த வீடுகளும் என
எங்கள் ஊரை இன்னும் அழகாய்
சொல்ல வரிகள் தேடிக்கொண்டு இருக்கிறேன் வாய்க்காலில் அமர்ந்து....

No comments:

Post a Comment